Tuesday 7th of May 2024 03:38:43 PM GMT

LANGUAGE - TAMIL
-
யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து  கன மழை!

யாழ் மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து கன மழை!


நேற்று காலையிலிருந்து யாழ் மாவட்டத்தில் காணப்பட்ட மழையுடன் கூடிய காலநிலையின் காரணமாக தற்போதுவரை 162 குடும்பத்தை சேர்ந்த 587 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் என் சூரியராஜ் தெரிவித்தார்.

நேற்று காலையிலிருந்து யாழ்ப்பாண குடாநாட்டில் பெய்த மழையின் தாக்கத்தின் காரணமாக 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

யாழில் 162 குடும்பங்களைச் சேர்ந்த 587பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் யாழ் மாவட்டஅனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் தெரிவித்தார்.

மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நீடிப்பதன் காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE